Published : 16 Sep 2020 03:45 PM
Last Updated : 16 Sep 2020 03:45 PM
இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன்னர் முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அச்சம் காரணமாகக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனினும் இறுதிப் பருவத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. குறிப்பாகக் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புப் படித்து வரும் மாணவர்களுக்கு இன்னும் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை.
இதற்கிடையே முந்தைய (5-வது செமஸ்டர்) தேர்வைக் கணக்கில் கொண்டு, முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைச் சில கல்லூரிகள் நடத்தி வருவதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன்னால் முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தினால், அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT