Published : 14 Sep 2020 08:11 AM
Last Updated : 14 Sep 2020 08:11 AM

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (செப்.15) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.21 முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் செப்.15-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேநேரம் விண்ணப்ப எண்ணை தவறவிட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் செப்.17, 18-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x