Published : 05 Sep 2020 07:26 AM
Last Updated : 05 Sep 2020 07:26 AM

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் சட்டப்படிப்புகள் குறித்து நிபுணர்கள் இன்று உரை

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் இன்று பிளஸ் 2மாணவர்களுக்கான சட்டப் படிப்புகள் பற்றிய தகவல்கள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். இதில் தேனி நிரந்தர லோக் அதாலத்தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஏ.முகமது ஜியாபுதீன், மெக்கன் சட்ட நிறுவன பங்குதாரர், வருமானவரித் துறை முன்னாள் மூத்தநிலை ஆலோசகர் வழக்கறிஞர் என்.முரளிகுமாரன், சிங்கப்பூர் பிக் த்ரீஸ்ட்ரேட்டஜிஸ் நிறுவன இயக்குநர் ஜி.கார்த்தீசன், சென்னை ‘விஸ்டாஸ்’ ஸ்கூல் ஆஃப் லா உதவி பேராசிரியர் வி.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று சட்டப் படிப்புகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்பும் மாணவ,மாணவிகள் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ‘இந்து தமிழ் திசை’, ‘வேல்ஸ் இன்ஸ்டிடியூட்’ இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x