Published : 02 Sep 2020 03:51 PM
Last Updated : 02 Sep 2020 03:51 PM

வேலை வேண்டுமா?- ராணுவத்தில் அரசுப்பணிக்கு 1,522 காலியிடங்கள்- ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்

இந்திய ராணுவத்தின் துணை அமைப்பான எஸ்எஸ்பியில் (சஷாஸ்த்ர சீமா பால்) காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

குறிப்பாக ராணுவத்தில் வண்டி ஓட்டுநர், ஆய்வக உதவியாளர், சமையல்காரர், தச்சர், தோட்ட வேலை தெரிந்தவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

வேலையின் பெயர்: காவலர்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர்கள் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 1,522
சம்பளம்: 7-வது ஊதியக் கமிஷன் அடிப்படையில் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
வயது வரம்பு: 18- 27 வரை. குறிப்பிட்ட சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை:
1. உடற்தகுதித் தேர்வு
2. எழுத்துத் தேர்வு
3. டிரேடு தேர்வு

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்: ரூ.100.
எஸ்சி, எஸ்டி, பெண்களுக்குக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.09.2020

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://onlinedatafiles.s3.amazonaws.com/ssb_advt_338_2018/ssb_advt_338_2018_CTs.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x