Published : 02 Sep 2020 07:41 AM
Last Updated : 02 Sep 2020 07:41 AM

கல்லூரி மாணவர் சேர்க்கை செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரைநீட்டித்து யுஜிசி உத்தரவிட்டுள் ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘கரோனா தொற்றால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அவகாசம் செப்.30-ம் தேதி வரைநீட்டிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். இதற்கான திருத்தப்பட்ட கல்வி ஆண்டு காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

மேலும், கல்லூரிகளில் நடத்தப்படாமல் உள்ள இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x