Last Updated : 29 Aug, 2020 06:36 PM

 

Published : 29 Aug 2020 06:36 PM
Last Updated : 29 Aug 2020 06:36 PM

ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய மாணவர்கள்: ஃபிட்னஸ் பிரச்சாரத்தைத் தொடங்கிய டெல்லி அரசு

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய மாணவர்களுக்காக ஃபிட்னஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மார்ச் 16-ம் தேதியில் இருந்து மூடப்பட்டுள்ளன. மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது.

மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அரசு, பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான மாணவர்களுக்காக ஃபிட்னஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

''ஆரோக்கிய உடல், ஆரோக்கிய மனம்'' என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காகத் தனி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஃபிட்னஸ் வீடியோக்கள் பதிவிடப்படும்.

அதை மாணவர்கள் ஒரு வாரத்துக்குப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதன்மூலம் பெருந்தொற்றுக் காலத்தில் உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x