Published : 24 Aug 2020 08:00 AM
Last Updated : 24 Aug 2020 08:00 AM

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

கரோனா பரவலால் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 1 முதல் 10-ம் வகுப்புகள் வரையான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் கடந்த 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூடுதலாக மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகிறது. இதற்காக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கையின்போது அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x