Published : 14 Aug 2020 07:39 AM
Last Updated : 14 Aug 2020 07:39 AM

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று ‘அலைய்டு ஹெல்த் சயின்சஸ்’ குறித்து உரை- துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு

‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று(ஆக.14) மாலை 4.30 மணிக்கு‘அலைய்டு ஹெல்த் சயின்சஸ்’படிப்பு குறித்து துறைசார் வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு துறைகள் தொடர்பாக அந்தந்தத் துறை வல்லுநர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் ‘டாக்டர் எம்.ஜி.ஆர். எஜுகேஷனல் அண்ட்ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி, சென்னை ‘பாரத் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்’ டீன் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, வேலூர் ‘சிஎம்சி குவாலிட்டி மேனேஜர் அண்ட் அசோசியேட்(ஜிஎஸ்)’ டாக்டர் லாலு ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டு ‘அலைய்டு ஹெல்த் சயின்சஸ்’ படிப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதை ‘இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்’ இணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x