Published : 13 Aug 2020 07:06 AM
Last Updated : 13 Aug 2020 07:06 AM

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று எலெக்ட்ரோ கெமிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினீயரிங் உரை: துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ், ‘அமிர்தாவிஷ்வ வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டிநிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பன குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம்தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு துறைகள் தொடர்பாக அந்தந்தத் துறை வல்லுநர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் கோவை‘ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மனிதவளஇயக்குநர் டாக்டர் கவிதாசன், ‘பிரான்ஸ் அசஸ்டம் இ அண்ட் ஐ,நியூக்கிளியர் இன்ஜினீயர்’ (டிசைன் அண்ட் இன்னோவேஷன்) விக்னேஷ் எஸ்.கந்தசாமி, கோவை ‘கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி’ கெமிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன், ‘சிக்ரி’ பி.டெக். ஸ்டடீஸ், சீஃப் சயன்டிஸ்ட் அண்ட்டீன் டாக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு கெமிக்கல்,எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதை ‘இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட்ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்’ இணைந்து நடத்துகிறது.பங்கேற்பு கட்டணம் இல்லை. பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x