Last Updated : 08 Aug, 2020 08:15 PM

 

Published : 08 Aug 2020 08:15 PM
Last Updated : 08 Aug 2020 08:15 PM

பாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ

பாடத்திட்டக் கட்டமைப்பு மூலம் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று சிபிஎஸ்இ இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆளும் பாஜக அரசு, 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில், தாய்மொழி வழிக்கல்வி, பொதுத் தேர்வு முறையில் மாற்றம், கட்டாய மழலையர் கல்வி, பட்டப் படிப்பில் ஒரே நேரத்தில் பல்வேறு நுழைவுகள், வெளியேறல், உயர்கல்வி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சிபிஎஸ்இ இயக்குநர் பிஸ்வஜித் சாஹா, ''கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள், தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு மூலம் செயல்பாட்டுக்கு வரும். கல்விக் கொள்கை பல்வேறு கருத்துகள் மற்றும் பலதரப்பட்ட அணுகுமுறைகளை ஒன்றிணைப்பதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு உரிய வழிமுறைகளை வழங்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் பங்கேற்புடன் இதை நடைமுறைப்படுத்தலாம். கல்விக் கொள்கை அடிப்படையில் ஒரு முன்னோக்குக் கொள்கை ஆகும்'' என்று சிபிஎஸ்இ இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x