Published : 08 Aug 2020 01:35 PM
Last Updated : 08 Aug 2020 01:35 PM

முதுகலை மருத்துவத் தேர்வுகள் தேதி அறிவிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி

கரோனா தொற்றுக்கு நடுவே முதுகலை மருத்துவத் தேர்வுகள் தேதியை மருத்துவக் கல்வி இயக்குனரகம் திடீரென அறிவித்துள்ளது. இது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா மருத்துவப் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பதால் மூன்று மாதங்களுக்குத் தேர்வுகளைத் தள்ளி வைப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுகலைப் பட்டயத் தேர்வுகள் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் இந்த மாதமே நடைபெற உள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்வுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ளதால், கரோனா மருத்துவப் பணிக்கு இடையே தேர்வுக்குத் தயாராவது கடினம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் முதுகலை மருத்துவ மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாகவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x