Published : 07 Aug 2020 06:48 AM
Last Updated : 07 Aug 2020 06:48 AM

சுதந்திர தின கட்டுரைப்போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு

மத்திய மனித ஆற்றல் மேம்பாட் டுத் துறை அமைச்சகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

சுதந்திர தினவிழா கொண்டாட்ட மானது ‘தற்சார்பு இந்தியா’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. அதன்படி ‘தற்சார்பு இந்தியா; சுதந்திர இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக வைத்து கட்டுரைப் போட்டிக்கான 10 தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரு நிலைகளில் கட்டுரை தேர்வுகள் நடைபெறும். ஒவ் வொரு மாநிலத்தில் இருந்து தலா 10 கட்டுரைகள் மத்திய தொகுப்புக்கு தேர்வு செய்யப் படும். அதிலிருந்து தேசிய அள வில் சிறந்த கட்டுரைகளை நிபுணர் குழு தேர்வு செய்யும்.

ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கள் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் https://innovate.mygov.in/essay-competition என்ற இணையதளம் வழியாக பதிவுகளை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x