Published : 06 Aug 2020 07:50 AM
Last Updated : 06 Aug 2020 07:50 AM
‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்றுஎலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,சுற்றுச்சூழல் இன்ஜினீயரிங் படிப்புகள் பற்றி துறைசார் வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் - ‘அமிர்தாவிஷ்வ வித்யாபீடம்’ இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளோடு நிற்கும் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையிலான இந்த நிகழ்ச்சி, கடந்த ஜூலை 24-ம் தேதிதொடங்கி நடந்து வருகிறது.
இன்றைய நிகழ்வில் தமிழக ரயில்வே டிஜிபியும், தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநருமான டாக்டர் சி.சைலேந்திர பாபு ஐபிஎஸ்,சென்னை அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வு மையம் பேராசிரியர், தலைவர் டாக்டர் எஸ்.கண்மணி, அரியலூர் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் (எலெக்ட்ரிக்கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT