Published : 05 Aug 2020 05:48 PM
Last Updated : 05 Aug 2020 05:48 PM

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப் படிப்புகள்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று (ஆக.5) வெளியிட்ட அறிவிப்பு:

"சென்னை - 5, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களைப் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக நியமனம் செய்ய, மாணவர்களைத் தேர்வு செய்து, பணி நியமன உத்தரவு வழங்குகிறார்கள். இதன்படி, பல்வேறு மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ.(தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகளை முன்னுரிமைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தினை பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம், தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.200

எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு - ரூ.100

(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 13.08.2020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணத்திற்கான ரூ.200 (எஸ்.சி/எஸ்.டி. - ரூ.100) வங்கி வரைவோலையினை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)

இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர்

மொபைல் எண்: 9884159410

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,

எண்.5 காமராசர் சாலை, சென்னை - 600 005

தொலைபேசி எண்.044 - 28440102 / 28445778

இ-மெயில்: tilschennai@tn.gov.in".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x