Published : 04 Aug 2020 07:05 AM
Last Updated : 04 Aug 2020 07:05 AM

5 ஆண்டு கால சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: செப்.4-ம் தேதி கடைசி நாள்

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால சட்டப் படிப்பில் சேரநாளை (ஆக.5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 5ஆண்டு கால இளங்கலை சட்டப்படிப்பில் (எல்எல்பி) சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை (புதன்) தொடங்குகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை ( www.tndalu.ac.in) பயன்படுத்தி செப். 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நேரடி விண்ணப்பங்கள் ஆக. 10-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான 3 ஆண்டு கால இளங்கலை சட்டப் படிப்புக்கும், முதுகலை சட்டப் படிப்புக்கும் விண்ணப்பம் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x