Published : 01 Aug 2020 06:36 PM
Last Updated : 01 Aug 2020 06:36 PM

சட்டப் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள், 5 ஆண்டு சட்டப் படிப்புகள், சட்ட மேற்படிப்புகள் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 3 ஆண்டு சட்டப் படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து www.tndalu.ac.in என்ற இணையதளத்தை நாடி, செப்டம்பர் 4-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்பில் 156 இடங்களும் தமிழகம் முழுவதும் உள்ள 11 சட்டக் கல்லூரிகளில் 1,372 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x