Last Updated : 01 Aug, 2020 04:15 PM

 

Published : 01 Aug 2020 04:15 PM
Last Updated : 01 Aug 2020 04:15 PM

புதிய கல்விக் கொள்கையை ஆராய 40 பேர் கொண்ட குழு: அசாம் அரசு அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கையை ஆராய 40 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, குழுவின் தலைவராக கல்வித்துறையின் முதன்மைச் செயலர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.

இந்தக் குழு டிசம்பர் 31-ம் தேதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி மாதத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அறிக்கை தயாரிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவை. இந்த மாற்றத்துக்குத் தேவையான பணியை குழு மேற்கொள்ளும்.

இந்தக் குழு பல்வேறு துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, கல்விக் கொள்கையின் அம்சங்களை ஆராயும்.
அசாம் அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கொள்கையை வரவேற்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஏற்கெனவே மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, 12-ம் வகுப்பு வரை கல்வி கட்டாயம் உள்ளிட்ட கொள்கைகள் சிறப்பானவை.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x