Published : 31 Jul 2020 10:24 AM
Last Updated : 31 Jul 2020 10:24 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: 98.10% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்த கோவை மாவட்டம்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டம் 98.10% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.

இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%. இதில், தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 2,819. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2,672.

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்

கோயம்புத்தூர் - 98.10%

விருதுநகர் - 97.90%

கரூர் - 97.51%

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x