Published : 31 Jul 2020 10:01 AM
Last Updated : 31 Jul 2020 10:01 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வு: அரசுப்பள்ளிகள் 92.71% தேர்ச்சி; பள்ளிகள் வாரியான தேர்ச்சி விவரங்கள்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 92.71% தேர்ச்சி அடைந்துள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.

இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,249. இதில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,716.

பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் - 92.71%

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.95%

மெட்ரிக் பள்ளிகள் - 99.51%

இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 96.20%

பெண்கள் பள்ளிகள் - 97.56%

ஆண்கள் பள்ளிகள் - 91.77%

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x