Published : 25 Jul 2020 08:38 AM
Last Updated : 25 Jul 2020 08:38 AM

கலை, அறிவியல் படிப்பில் மாணவர் சேர்க்கை- ஆக.1 முதல் சான்றிதழ் பதிவேற்றம்

கலை, அறிவியல் படிப்புக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் சான்றிதழ்களை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: அரசுகலை, அறிவியல் கல்லூரியில் சேர இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 20-ல் தொடங்கியது. 2 லட்சத்து 9,237 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 27,975 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் விநியோகிக்கப்படுகிறது. இதற்கேற்றவாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்க மாணவர்கள் கோரியுள்ளனர். மாணவர்கள் ஆகஸ்ட்1 முதல் 10-ம் தேதி வரை http://tngasa.in/ என்ற இணையதளம் வழியாக சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x