Published : 24 Jul 2020 06:59 AM
Last Updated : 24 Jul 2020 06:59 AM

‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்: 15 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது; வல்லுநர்கள் பங்கேற்பு

சென்னை

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) தொடங்குகிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்க உள்ள இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ வழங்குகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம்என்பது போன்ற பல கேள்விகள், சந்தேகங்களோடு இருக்கும் மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்டும் வகையிலான இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கி, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தினமும் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

இதில் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், ரோபோடிக், ஆட்டோமேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினீயரிங், ஏரோநாட்டிகல், பயோடெக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் குறித்து இத்துறை சார்ந்த வல்லுநர்கள் பேசுகின்றனர்.

மாணவர்கள், பெற்றோருக்கு பயனுள்ள வகையிலான இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி இன்றுமாலை நடக்கிறது. தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தொடங்கிவைத்து உரையாற்றுகிறார். ஃபோர்டு நிறுவன முன்னாள் தரக் கட்டுப்பாடு பிரிவு இயக்குநரும், நிமாக் அலுமினியம் காஸ்டிங் இந்தியா நிறுவனத்தின் தர மேலாளருமான (CHE) ஆர்.ஜீவானந்தம், கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப்இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியர் மற்றும்தலைவருமான டாக்டர் என்.குணசேகரன், சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் துறைஇணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவருமான (பொறுப்பு) டாக்டர் எம்.ஜெய்குமார் ஆகியோர் பங்கேற்று, ஆட்டோமொபைல் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப்இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜிஇணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது போன்ற கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x