Published : 22 Jul 2020 06:54 AM
Last Updated : 22 Jul 2020 06:54 AM

கலை, அறிவியல் படிப்பு: 24 மணி நேரத்தில் 89 ஆயிரம் விண்ணப்பம்

கோப்புப் படம்

சென்னை

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கடந்த 24 மணி நேரத்தில்89,538 பேர் விண்ணப்பித்தனர்.

அரசு மற்றும் தனியார் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம்மாலை 6 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in,www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி 89,538மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், ஜூலை 15-ல்தொடங்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80,009 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு 6 நாட்களில் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஒரேநாளில் 90 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x