Published : 18 Jul 2020 07:20 AM
Last Updated : 18 Jul 2020 07:20 AM
தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி கடந்த ஜூன் முதல் வாரத்தில் நிறைவடைந்தது. அதன்பின் அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 1.98 கோடி புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன.
அதேபோல், விற்பனைக்காக தனியார் பள்ளிகளுக்கு 1.95 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுமாவட்ட மைய குடோன்கள்மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு தற்போது இணைவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் கணிசமான அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதன்மூலம் 40.4 கோடி வருவாய் கிடைத் துள்ளது.
மேலும், நடப்பு ஆண்டுமாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஷூ மற்றும் காலுறைகள் கொள்முதலுக்கான பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT