Published : 15 Jul 2020 07:20 AM
Last Updated : 15 Jul 2020 07:20 AM

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் நுழைவுத்தேர்வு (SAEEE-2020) ரத்து செய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கரோனாவைரஸ் பரவலால் அசாதாரணசூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவிகள், பெற்றோரின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, இந்தஆண்டுக்கான நுழைவுத் தேர்வைசத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரத்து செய்கிறது.

மாணவ, மாணவிகள் தங்களதுபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப் பிரிவில்சேர்ந்து படிக்கலாம். ஜேஇஇ தேர்வுஎழுதிய மாணவ, மாணவிகளுக்குஅந்த மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களை www.sathyabama.ac.in என்ற இணையதளம், admissions2020@www.sathyabama.ac.in என்ற மின் அஞ்சல்,9940058263 என்ற வாட்ஸ்அப் எண்,1800 425 1770 என்ற இலவச தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று சத்யபாமா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x