Published : 14 Jul 2020 12:43 PM
Last Updated : 14 Jul 2020 12:43 PM
கரோனா சூழலில் அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் ஆந்திரப் பிரதேச அரசு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.
ஆந்திர அரசு, உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல், மருத்துவம், விவசாயம், வணிகவியல் மேலாண்மை, சட்டம் மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு EAMCET, ICET, PGCET, LawCET, EdCET உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இவை வழக்கமாக மே மாதத்தில் நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் சுரேஷ், ''கரோனா சூழலை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தத் தேர்வுகளை செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்ம்.
நுழைவுத் தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பெருந்தொற்றுக் காலத்தில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டிருப்பதை நாம் நினைவுகூர வேண்டும்'' என்று அமைச்சர் சுரேஷ் தெரிவித்தார்.
கேரளாவில் நாளை மறுநாள் (ஜூலை 16) மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT