Published : 10 Jul 2020 07:01 AM
Last Updated : 10 Jul 2020 07:01 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை அக்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை அக்டோபர் 20 வரை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று இன்னும் கட்டுக் குள் வராததால் மாணவர் சேர்க் கைக்கான அவகாசத்தை நீட்டிக்க கல்லூரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று 3-வது முறையாக கல்வி ஆண்டு அட்டவணையில் திருத்தங்களை செய்து ஏஐசிடிஇ வெளியிட்டுள் ளது. அதன்விவரம்:

தொழில்நுட்பக் கல்லூரிகளுக் கான அங்கீகார நீட்டிப்பை ஆகஸ்ட் 15-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். இதுதவிர பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான முதல்சுற்று கலந்தாய்வை அக். 5-க்குள் முடிக்க வேண்டும். மேலும், 2, 3-ம் சுற்று கலந்தாய்வை அக்.20-க்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் 2, 3, 4-ம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க வேண்டும். தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்.15-ல் ஆரம்பிக் கப்பட வேண்டும்.

முதுநிலை பட்டய மற்றும் சான் றிதழ் படிப்புக்கான வகுப்புகளை ஜூலை 15-ல் தொடங்கலாம். இதற் கான மாணவர் சேர்க்கை பணி களை ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகள் வகுப்புகளை இணையவழியிலும் நடத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x