Published : 07 Jul 2020 04:18 PM
Last Updated : 07 Jul 2020 04:18 PM

புதிய கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைத்து சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது.

கரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய கல்வியாண்டான ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் அவை முழுமையான அளவில் கற்பித்தலை நிகழ்த்தவில்லை. இதனாலும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பாலும், பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அண்மையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தைக் குறைத்துள்ளதாக அறிவித்தது. ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளுக்கு, இந்தக் கல்வி ஆண்டில் 25 சதவீதப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சிஐஎஸ்சிஇ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்இ-யும் விரைவில் பாடத் திட்டத்தைக் குறைத்து அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x