Published : 05 Jul 2020 07:06 AM
Last Updated : 05 Jul 2020 07:06 AM

நீட், ஜேஇஇ விண்ணப்பங்களில் திருத்தம்: ஜூலை 15 வரை கால அவகாசம்

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு செப். 1 முதல்6-ம் தேதி வரையும், நீட் தேர்வு செப்.13-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து நீட், ஜேஇஇநுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஜூலை 15-ம்தேதி வரை https://nta.ac.in/என்ற இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்களைசெய்வதுடன், தேர்வு மையத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x