Published : 03 Jul 2020 08:03 AM
Last Updated : 03 Jul 2020 08:03 AM

பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக கவுன்சில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை: உயர்கல்வித் துறை விளக்கம்

சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக வெளியான செய்திக்கு உயர்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜூன் 2-ம் தேதி (நேற்று), ‘ஆகஸ்ட்டில் பொறியியல் கலந்தாய்வு, உயர்கல்வித் துறை கூட்டத்தில் முடிவு’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

தற்போது அந்த செய்திக்கு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர்கல்வித் துறை கவுன்சில்கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் 29-ம்தேதி நடைபெற்றதாகவும், அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தங்கள் நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர் சேர்க்கை தொடர்பாக கவுன்சில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தகவலும் உண்மையல்ல.

இவ்வாறு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x