Last Updated : 12 Jun, 2020 02:19 PM

 

Published : 12 Jun 2020 02:19 PM
Last Updated : 12 Jun 2020 02:19 PM

நூலகங்கள், அங்கன்வாடிகளில் ஆன்லைன் வகுப்புகள்: பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்காக கேரளாவில் தொடக்கம்

கேரளாவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு நூலகங்கள், அங்கன்வாடிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மார்ச் 17-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு மற்றும் நோய்ப் பரவல் அச்சத்தால் பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போயுள்ளது.

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் ஆன்லைன் கற்பித்தலை ஊக்குவித்து வருகின்றன. இதற்கிடையே பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்குக் கற்றல் என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாத ஒன்றாக மாறி வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் அவர்களுக்காகவே நூலகங்கள், அங்கன்வாடிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அம்மாநிலக் கல்வித் துறை அதிகாரி கூறும்போது, ''இந்த ஆண்டு பள்ளிகளைத் திறப்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாநில அரசு சார்பில் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதற்காக ஜூன் 1-ம் தேதி மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டன. தற்போது ஸ்மார்ட் போன்கள் இல்லாத ஏழை சமூக மக்களுக்காக லேப்டாப், புரொஜெக்டர், திரை ஆகியவை வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நூலகங்களுக்கும் அங்கன்வாடிகளுக்கும் வந்து கல்வி கற்கின்றனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x