Published : 10 Jun 2020 02:37 PM
Last Updated : 10 Jun 2020 02:37 PM

11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மட்டும் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித்துறை

தமிழகப் பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பில் தேர்வு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மட்டும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்றுஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மற்றும் நடைபெறாமல் உள்ள 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

அத்துடன், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றித் தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்துக் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதில், ’’11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது போலம் 11-ம் வகுப்பிலும் தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x