Published : 09 Jun 2020 02:04 PM
Last Updated : 09 Jun 2020 02:04 PM

அனைத்து மாநிலக் கல்வித்துறை செயலர்களுடன் உரையாடல்: அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு

அனைத்து மாநிலக் கல்வித்துறை செயலர்களுடன் உரையாடல் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மாநிலக் கல்வித்துறை செயலர்களுடன் உரையாடல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் அனிதா கார்வாலிடம் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் கல்வித் துறை செயலாளர்களுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவார். அவர்களிடம் பள்ளி மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆன்லைன் கற்றலில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கருத்துகளைக் கேட்டறிய உள்ளார்.

அத்துடன் ஆசிரியர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை அடுத்து, வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கன பாடத் திட்டங்களைக் குறைக்கவும் சிந்தித்து வருகிறோம்.'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும் சூழல் இந்தியாவில் இல்லை என்பதால், மாநிலங்களின் கருத்தைக் கேட்டு, மத்திய அரசு கற்றலுக்கான மாற்று வழியை அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x