Published : 07 Jun 2020 06:39 AM
Last Updated : 07 Jun 2020 06:39 AM

பல்கலை., கல்லூரி பருவத்தேர்வுகள்: சூழ்நிலையை பொறுத்து முடிவு- கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

சென்னை

பருவத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அகில இந்தியதொழில்நுட்பக் கல்வி குழுமஉறுப்பினர் செயலர் ராஜீவ்குமார்அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘புதிய கல்வி ஆண்டுதாமதம் தொடர்பாக பல்கலை. மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட வழிகாட்டுதலின்படி கடந்தகல்வி ஆண்டுக்கான பருவத்தேர்வுகளை ஜூலையில் நடத்தவும், கல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்தச் சூழலில் பருவத்தேர்வுகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் ஏஐசிடிஇ-க்கு வருகின்றன. மேலும், மாணவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தும், உள்ளூர்சூழலைக் கருத்தில் கொண்டும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x