Published : 23 May 2020 09:08 PM
Last Updated : 23 May 2020 09:08 PM

விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் தீவிரம் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இப்போது மே 31- ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ல் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் மே 26-ம் தேதி பள்ளிக்கு வந்தாக வேண்டும் என அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இதற்காக போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் கூடுதல் விடைத்தாள் திருத்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஆசிரியர்களும் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஒவ்வொரு விடைத்தாளை எடுக்கும் முன்னும் கட்டாயம் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x