Published : 23 May 2020 05:39 PM
Last Updated : 23 May 2020 05:39 PM

விடைத்தாள் திருத்தும் மையங்களில் தூய்மை பேணுக: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களாகச் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் வரும் 27-ம் தேதி முதல் திருத்தப்பட உள்ளன. பொது முடக்கம் காரணமாக நீண்ட நாட்களாக வகுப்பறைகள் உபயோகப் படுத்தப்படாமல் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஊழியர்களைக் கொண்டு அறைகளை நன்றாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்கள் உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டிடங்கள், அறைகள் ஆகியவற்றை காலை, மாலை என இரு வேளைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x