Published : 20 May 2020 07:44 AM
Last Updated : 20 May 2020 07:44 AM

ஜூலையில் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல் ​

தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:​

அனைத்துவித பள்ளிகளையும் ஜூலை 1 முதல் திறந்து சுழற்சி முறையில் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை அமர வைத்து, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து வரவும் மாணவர்களை அறிவுறுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.​

​தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சி. இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து ஒருநாள் இடைவெளிவிட்டு வகுப்புகளை நடத்தலாம். அரசுப் பள்ளிகளை போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை இலவசமாகத் தரவேண்டும். பாடத்திட்டத்தில் 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x