Published : 19 May 2020 08:44 AM
Last Updated : 19 May 2020 08:44 AM
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு குறித்து உயர் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின்அனைத்து இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.
காலை 10 மணி அளவில்தொடங்கிய கூட்டம் மதியம் 1.30 மணி வரை நீடித்தது. முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர் கூட்டம் முடிவடைந்த பின்னர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வை தள்ளிவைக்குமாறு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பொதுத்தேர்வுதொடர்பாக தகவல் ஏதும் தெரிவிக்காததால், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT