Published : 18 May 2020 02:37 PM
Last Updated : 18 May 2020 02:37 PM

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஜூலை 1-ல் தொடக்கம்: அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இன்று (மே 18) வெளியிடப்பட்டுள்ளது.​​ இதன்படி தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கல்வி நிறுவனனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வுக் கால அட்டவணை மே 16-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்திருந்தது.​ஆனால், சிபிஎஸ்இ இணையதளத்தில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை இன்று (மே 18) வெளியிடப்படும். சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ​ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜூலை 1-ம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார். அத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி இந்தியா முழுவதும் பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் வடகிழக்கு டெல்லிக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x