Published : 16 May 2020 07:47 AM
Last Updated : 16 May 2020 07:47 AM

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்கள், கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள், அந்தந்தப் பகுதியிலேயே தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அறிவிக்கப்படும். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஜக்டோ-ஜியோ அமைப்பினர் புறக்ககணிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x