Published : 16 May 2020 07:17 AM
Last Updated : 16 May 2020 07:17 AM

‘அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்’, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் செயற்கை நுண்ணறிவு, இணையம் குறித்து நாளை மாலை இணையவழி உரையாடல்: நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்; மாணவர்கள் பங்கேற்கலாம்

சென்னை

கரோனா பாதிப்புக்குப் பிறகு கல்வி, தொழில் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்), இணையம் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) ஆகியவை உண்டாக்கும் விளைவுகள் குறித்து ஆராய ‘அமிர்தா ஸ்கூல்ஆஃப் இன்ஜினீயரிங்’, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நாளை (மே 17) மாலை இணைய வழி உரையாடல் நடத்தப்பட உள்ளது.

பொறியியல் படிப்பில் எந்த பாடப் பிரிவை தேர்வு செய்வது என்ற குழப்பம் பல மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்), இணையம் (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) ஆகிய 2 துறைகளும் வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்கூட செயற்கைநுண்ணறிவின் பயன்பாடும்,இணையம் வழியிலான தகவல்பரிமாற்றமும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. கரோனா பாதிப்புக்குப்பிறகு, கல்வி, தொழில் சார்ந்ததுறைகளில் செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த படிப்புகளுக்கான தேவை, வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆலோசிக்கும் விதமாகவே இணைய வழி உரையாடல் நாளை நடத்தப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு, கேட்டர்பில்லர் நிறுவன பொதுமேலாளர் (செயலாக்கம், திருவள்ளூர் பிளான்ட்) என்.அன்புச்செழியன், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியர் டாக்டர் இ.ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடக்க உள்ள இந்த இணைய வழி உரையாடலில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/amritawebinar.php எனும் வலைப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x