Published : 06 May 2020 08:36 AM
Last Updated : 06 May 2020 08:36 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜூன் மூன்றாவது வாரம் அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

கரோனா பாதிப்பு குறைந்தபிறகு, ஜூன் மூன்றாவது வாரம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு அம்மா உணவகத்துக்குத் தேவையான அரிசி மூட்டைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 69 பேர் குணமடைந்துள்ளனர்.ஒருவர் உயிரிழந்துள்ளர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் மே 17-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்.கரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர், முதல்வர் அனுமதி பெற்று, ஜூன் மூன்றாவது வாரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x