Published : 21 Apr 2020 02:04 PM
Last Updated : 21 Apr 2020 02:04 PM
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் 80 பள்ளிகள், கரோனா வைரஸுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாறியுள்ளன.
கரோனா வைரஸ் பெருந்தொற்றை ஒழிக்கும் பணியில் ஆரம்பத்தில் இருந்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஈடுபட்டுள்ளது. நோய் பரவ ஆரம்பித்த நாட்களில் இருந்து வெவ்வேறு இடங்களில் உள்ள கே.வி. பள்ளிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல பிஎம் கேர்ஸ் நிதிக்கு கே.வி. சங்கதன் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் இதுவரை ரூ.10 கோடியே 40 லட்சத்தை நிதியுதவியாக அளித்துள்ளனர்.
இதற்கிடையே கே.வி .பள்ளிகள் விடுமுறையால் ஆன்லைன் வழிக் கற்பித்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்வயம் பிரபா தளம் வழியாக லைவ் பயிற்சிகளும் மேல்நிலை வகுப்புகளுக்கு நடத்தப்பட்டன. இது தொடர்பாக மாணவர்களுக்கு இ-மெயில், அழைப்பு, வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் வழியாக அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
இதுவரை 32,247 ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக வகுப்பெடுத்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 7,07,321 மாணவர்கள் ஆன்லைன் கற்றலில் கலந்து கொண்டுள்ளனர். வகுப்புகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல், உளவியல் ஆலோசனைகளையும் கேந்திரிய வித்யாலயாக்கள் வழங்கி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT