Last Updated : 20 Apr, 2020 02:30 PM

 

Published : 20 Apr 2020 02:30 PM
Last Updated : 20 Apr 2020 02:30 PM

கரோனா துயர்: மாதவிடாய் நாப்கின்கள் இல்லாமல் அவதிப்படும் பள்ளி மாணவிகள்

பிரதிநிதித்துவப் படம்.

கரோனா ஊரடங்கின் காரணமாக மாதவிடாய் நாப்கின்கள் இல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொலைதூரைப் பள்ளி மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன.

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் படித்துவரும் மாணவிகள் நாப்கின்கள் இல்லாமல் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து மாநிலக் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் சங்கீதா பெனிவால் கூறும்போது, ''இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

CRY அமைப்பின் மாநிலத் திட்ட மேலாளர் தரம்வீர் யாதவ் இதுகுறித்துக் கூறும்போது, ''மாதவிடாய் சுகாதாரம் என்பது கிராமப்புற அரசுப் பள்ளி மாணவிகளிடையே பெரிய சவாலாக உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவிகள் துணிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிகாட்டல்களை அளிக்கவேண்டும்.

ஏற்கெனவே சில ஆட்சியர்கள், வீடுகளுக்கே நேரடியாகச் சென்று நாப்கின்கள் வழங்கலை அறிமுகப்படுத்தி உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வழியாக இதைச் சாத்தியப்படுத்தலாம்'' என்று தரம்வீர் யாதவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x