Published : 11 Apr 2020 07:39 PM
Last Updated : 11 Apr 2020 07:39 PM

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி சார்பில் ரூ.3.37 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் வகையில் டோக் பெருமாட்டி கல்லூரி சார்பில் ரூ. 3.37 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி சார்பில் ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ரூ. 3.37 லட்சத்தில் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அதில் அத்தியாவசிய பொருட்களான மிளகு 50 கிராம், சீரகம் 50 கிராம், பூண்டு 100 கிராம், புளி 250 கிராம், கிராம், சாம்பார் பவுடர் 100 கிராம் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய 2500 பைகள் தயாரிக்கப்பட்டது.

அப்பொருட்களை இன்று மதுரை மாவட்ட நிர்வாகத்திடம், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தாளாளர் டேவிதார், கல்லூரி முதல்வர் கிறிஸ்டியனா சிங் மற்றும் நிதி ஆலோசகர் பவுல் பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் முதல்முறையாக பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x