Published : 19 Mar 2020 04:29 PM
Last Updated : 19 Mar 2020 04:29 PM

நீட்: விண்ணப்பப் படிவத்தைத் திருத்த இன்றே கடைசி நாள்

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த இன்றே கடைசி நாள் ஆகும்.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த, தேசியத் தேர்வுகள் முகமை மாணவர்களுக்குக் கடைசி வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் தங்களின் விண்ணப்பப் படிவத்தைத் திருத்திக்கொள்ளலாம் அல்லது சரிபார்த்துக் கொள்ளலாம்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணிநேரம் தேர்வு நடைபெறும். கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.

தேர்வு அனுமதிச் சீட்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x