Published : 13 Mar 2020 02:58 PM
Last Updated : 13 Mar 2020 02:58 PM

குரூப்-4 கலந்தாய்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வுத் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-4 தேர்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம் 12.11.2019 அன்று வெளியானது. தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அவர்களுக்கான கலந்தாய்வு மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சுருக்கெழுத்து, தட்டச்சர் குரூப் III பதவிக்கான கலந்தாய்வு, ஏப்ரல் 02-ம் தேதி முதல் 07-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வானவர்கள், விவரங்கள் அடங்கிய அழைப்பாணைக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x