Published : 13 Mar 2020 11:34 AM
Last Updated : 13 Mar 2020 11:34 AM
ராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சுமதிக்கு ‘சாதனை மாணவி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சுமதி. இவர் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வருவதுடன், விளையாட்டு, நன்னடத்தை, பள்ளி வருகை, கல்வி இணைச் செயல்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கி வருகின்றார். மேலும், பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் முன்மாதிரியாக திகழும் மாணவியாக உள்ளார்.
மாணவி சுமதியை பாராட்டி சாதனை மாணவி பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள் ரேவதி, ரீனா, லதா, சாந்தி, வத்சலா தேவி, நிஷா, சுமதி, முத்துலட்சுமி, புனிதா ராணி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் சுவாமி தாஸ் வரவேற்றார். மாணவி சுமதிக்கு சாதனை மாணவி பட்டம் மற்றும் பூச்செண்டு அளித்து தலைமை ஆசிரியர் செல்வராஜ் கவுரவித்தார். ஆசிரியைகள் அனைவரும் இணைந்து மாணவிக்கு கிரீடம் அணிவித்து பாராட்டினர்.
தொடர்ந்து சாதனை மாணவி பட்டம் பெற்ற சுமதி பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஜெரோம் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT