Published : 13 Mar 2020 10:56 AM
Last Updated : 13 Mar 2020 10:56 AM

கரோனா விழிப்புணர்வு மணற்சிற்பம்: கடலூர் பள்ளி மாணவர்கள் வடிவமைப்பு

கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கடலூரில் பள்ளி மாணவர்கள் மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன.

கரோனா குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூரில் பள்ளி மாணவர்கள் மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், முதுநகர் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் முகமூடி அணிந்த முக வடிவத்தை மணலில் தத்ரூபமாக வடித்துள்ளனர். அதேபோல கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைந்துள்ளது.

அதில் தண்ணீர்க் குழாயில் இருந்து வெளியாகும் நீரைக் கொண்டு கைகளைக் கழுவுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா விழிப்புணர்வு மணற்சிற்பத்தை சுற்றுவட்டார மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x