Published : 11 Mar 2020 02:58 PM
Last Updated : 11 Mar 2020 02:58 PM

டான்செட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

முதுநிலைப் படிப்புக்கான டான்செட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், 2020-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும் எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அட்டவணைப் பட்டியலின்படி, டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் 20-ம் தேதிக்குள் வெளியாக வேண்டும். அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மார்ச் 23-ம் தேதியில் இருந்து வெளியிடப்படும்.

இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் ஏப்ரல் 10-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருக்கும். டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலை. நடத்தும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும். அதில் அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற இடங்கள் ஒதுக்கப்படும்.

மதிப்பெண் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது, விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு https://www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x