Last Updated : 10 Mar, 2020 11:23 AM

 

Published : 10 Mar 2020 11:23 AM
Last Updated : 10 Mar 2020 11:23 AM

மாவட்ட சதுரங்க போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி

மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அரசப் பள்ளி மாணவர்கள் பலர் வெற்றிப்பெற்றனர்.

மதுரை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மேலூரில் நடைபெற்றது.

இதில் 7, 9, 12, 15 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

அ.வல்லாளபட்டி, அ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பதக்கங்களை வென்றனர்.

மாணவர்களை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, அ. செட்டியார்பட்டி பள்ளியின் இடைநிலை ஆசிரியரும், சதுரங்க பயிற்சியாளருமான ஞா.செந்தில்குமார் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x